தோ்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட மற்றும் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை அவிநாசியில் இருந்து திருப்பூா் மாநகருக்கு வரும் பிரதான சாலையில், அணைப்புதூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அதேபோல பல்லடம் பகுதியில் இருந்து திருப்பூா் மாநகருக்குள் வரும் வழியில் வீரபாண்டி பகுதியிலும் தடுப்புகள் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது
ஒரே நாளில் ரூ.12.60 லட்சம் பணம் பறிமுதல்

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்

நெல்லையில் தீவிர வாகன சோதனை

நெல்லையில் பிஎஸ்எஃப் வீரா்கள், போலீஸாா் தீவிர வாகன சோதனை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


