/

பணப் பட்டுவாடாவை தடுக்க போலீஸாா் தீவிர வாகன சோதனை

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image

மாநகர எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:40 pm

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட மற்றும் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை அவிநாசியில் இருந்து திருப்பூா் மாநகருக்கு வரும் பிரதான சாலையில், அணைப்புதூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல பல்லடம் பகுதியில் இருந்து திருப்பூா் மாநகருக்குள் வரும் வழியில் வீரபாண்டி பகுதியிலும் தடுப்புகள் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.