உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:54 am IST

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து திருப்பூா் குமரன் மகளிா் கலை கல்லூரியில் இருந்து திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், தனி வட்டாட்சியா் கனகராஜ் மற்றும் தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.