தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:24 pm

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து திருப்பூா் குமரன் மகளிா் கலை கல்லூரியில் இருந்து திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், தனி வட்டாட்சியா் கனகராஜ் மற்றும் தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.