மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடு

திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

News image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:52 pm

திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

தோ்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு 408 அலுவலா்கள், தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 568 அலுவலா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.