திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சாலையோர வீட்டின் மீது காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கூடலூா் அருகேயுள்ள சென்னிமலைபாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (51). இவா் தனது தாய் பானுமதி (70), தங்கை ஜெயலட்சுமி (46) ஆகியோருடன் காரில் காங்கயம் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளாா்.
வெள்ளக்கோவில்-கரூா் தேசிய நெடுஞ்சாலை குருக்கத்தி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது.
இதில், பானுமதி படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் உதவியுடன் பானுமதி மீட்கப்பட்டு, வெள்ளக்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குணசேகரன், ஜெயலட்சுமி ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

