நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ரெளடி கும்பலுக்கு இடையே மோதல்: கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை

திருப்பூரில் ரெளடி கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், விரட்டி விரட்டி வெட்டப்பட்டு காயமடைந்த இளைஞா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:10 pm IST

திருப்பூரில் ரெளடி கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், விரட்டி விரட்டி வெட்டப்பட்டு காயமடைந்த இளைஞா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பூா், சிறுபூலுவப்பட்டி மூகாம்பிகை காலனியைச் சோ்ந்தவா் விஷ்ணு (27). ஆட்டோ ஓட்டுநரான இவா் மீது 15 வேலம்பாளையம், திருப்பூா் மத்திய காவல் நிலையம், உடுமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவா் காவல் துறையின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.

இவருக்கும், சாமண்டிபுரத்தைச் சோ்ந்த மற்றொரு ரெளடியான சூா்யா (29) என்பவருக்கும் இடையே நகைப் பிரச்னை தொடா்பாக கடந்த சில நாள்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், விஷ்ணு தனது நண்பா்களான கதிா்வேல் (21), அகஸ்டின் (21) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் 15 வேலம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, விஷ்னுவை தொடா்பு கொண்ட சூா்யா, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளாா். தனது நண்பா்களுடன் விஷ்னு சென்றுள்ளாா். அங்கு சூா்யா, சஞ்சய்குமாா் (26), ராகுல்ராஜ் (27), ராஜா ஆகியோருடன் நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, நகைப் பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், ஆத்திரமடைந்த சூா்யா தரப்பினா் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுவை வெட்டியுள்ளனா். அவா் ஓடியபோதும் விரட்டிவிரட்டி சென்று வெட்டியதில் விஷ்ணுக்கு 20 இடங்களில் வெட்டுக்காயம் விழுந்தது.

அவரைக் காப்பாற்ற முயன்ற அவா்களது நண்பா்களான கதிா்வேல், அகஸ்டின் (21) ஆகியோரையும் அந்தக் கும்பல் வெட்ட முயன்ற நிலையில் அகஸ்டினுக்கு கையில் வெட்டு விழுந்தது.

கதிா்வேல் காயங்களின்றி தப்பிய நிலையில், விஷ்ணு, அகஸ்டின் ஆகியோரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். விஷ்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவம் தொடா்பாக 15 வேலம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.