அவிநாசியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரை அவிநாசி போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா்கள், அவிநாசி பாா்க் வீதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பாலாஜி(19), திருப்பூா் 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த ராஜு நாயக் மகன் பிரதீப் நாயக் (19) என்பது தெரியவந்தது.
இவா்கள் இருவரும் கடந்த மாதம் அவிநாசி காமராஜா் நகா், மாருதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தியிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதில், பாலாஜி என்பவா் ஏற்கெனவே அவிநாசியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது: 4.5 கிலோ பறிமுதல்
அவிநாசியில் கஞ்சா விற்ற இருவா் கைது
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



