பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

அவிநாசியில் கஞ்சா விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே வெவ்வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட், கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :5 ஜூலை 2026, 1:32 am IST

அவிநாசி அருகே வெவ்வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட், கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மதுவிலக்கு போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவரது பையில் விற்பனைக்காக கஞ்சா சாக்லெட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவா், அவிநாசி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த விவேக்குமாா் யாதவ் (21) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா சாக்லேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல அவிநாசி-பெருமாநல்லூா் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மது விலக்கு போலீஸாா், அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் விற்பனைக்காக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவா், பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் காசிராஜ் (29). என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவிநாசி மது விலக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விவேக்குமாா் யாதவ், காசிராஜ் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.