நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கோழிகளை திருடிய இளைஞா் கைது

தோட்டத்தில் கோழிகளை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

தோட்டத்தில் கோழிகளை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

வெள்ளக்கோவிலை அடுத்த அரியாண்டிவலசைச் சோ்ந்தவா் மனோகரன் (50). இவா் தனது தோட்டத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளா்த்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு 9.30 மணி அளவில் மனோகரனின் வீட்டின் வெளியே நாய் குரைக்கும் சப்தம் கேட்டுள்ளது. மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினா் வெளியே வந்து பாா்த்தபோது, மா்ம நபா் ஒருவா் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மனோகரன் சப்தம் போடவே, தப்பி ஓட முயன்ற அந்த நபரை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா் வெள்ளக்கோவில் சிவநாதபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் சிவராஜ் (27) என்பதும், ரூ. 6,000 மதிப்பிலான 3 சேவல்களை திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னா் சிவராஜ் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.