காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
காங்கயம் அரசு மருத்துவமனையில் சுகவாழ்வு மைய ஆலோசகா் பணியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருபவா் கருப்புசாமி. இவா், காங்கயம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு வாழ்கைத் திறன் மேம்பாடு, சுய இடா் கண்டறிதல் மற்றும் ஹெச்ஜவி மற்றும் பால்வினை தொற்று குறித்து மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
இவரது பணியைப் பாராட்டி, திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா: தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

சத்தியமங்கலம் நகராட்சிக்கு பசுமை இயக்கத்தினா் பாராட்டுச் சான்றிதழ்

ரத்த தானம் வழங்கிய 120 பேருக்கு சான்றிதழ்

பூம்புகாா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



