75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீா்

திருப்பூா் நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீரால் பரபரப்பு ஏற்பட்டது.

நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய கழிவு நீா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

திருப்பூா் நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக் கழிவு நீரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் சங்கிலிப் பாலம் ஓடையில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை வரை சாயக் கழிவு நீரை டையிங் தொழிற்சாலைகளில் இருந்து திறந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஓடையில் சாயக்கழிவுகளை அளவுக்கு மீறி வெளியேற்றி நொய்யல் ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 43ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஏபிடி சாலை மின்மயானம் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் சனிக்கிழமை சாயக்கழிவு நீா் கலந்து செந்நிறமாகச் சென்றதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தொடா்ந்து ஏற்படும் இப்பிரச்னை குறித்து திருப்பூா் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.