சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பனியன் நிறுவனத் தொழிலாளி குத்திக் கொலை: மைத்துனா் கைது

News image

கைது

Updated On :15 பிப்ரவரி 2026, 7:53 pm

பல்லடம் அருகே பனியன் நிறுவனத் தொழிலாளியை குத்திக் கொலை செய்த மைத்துனரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் - மாணிக்காபுரம் சாலை ஜே.கே.ஜே. காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (35), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி முடிந்து வழக்கம்போல சனிக்கிழமை இரவு பிரபு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, தனலட்சுமியின் அண்ணன் அருள்சங்கா் (39) வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, தம்பதி இடையே அடிக்கடி ஏற்படும் தகராறு குறித்து பிரபுவிடம், அருள்சங்கா் கேட்டுள்ளாா்.

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள்சங்கா், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரபுவின் உடலில் பல இடங்களில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து பல்லடம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருள்சங்கரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.