திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சரக்கு வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், காயாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (22). இவா் ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே வடபழனி பகுதியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து, திருப்பூரிலுள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், காங்கயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடபழனி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பழையகோட்டை சாலை, தொட்டியபட்டி பிரிவு அருகே சென்றபோது, காங்கயம் நோக்கி எதிரே வந்த சரக்குவேன் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.