காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், காயாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (22). இவா் ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே வடபழனி பகுதியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து, திருப்பூரிலுள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், காங்கயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடபழனி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பழையகோட்டை சாலை, தொட்டியபட்டி பிரிவு அருகே சென்றபோது, காங்கயம் நோக்கி எதிரே வந்த சரக்குவேன் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


