அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அவிநாசி அருகே குடியிருப்புப் பகுதியில் குப்பை கொட்ட வந்த வாகனம் சிறைப்பிடிப்பு

அவிநாசி அருகே குடியிருப்புப் பகுதியில் குப்பை கொட்ட வந்த லாரியை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்

News image
குப்பை கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
Updated On :13 ஜனவரி 2026, 7:04 pm

Syndication

அவிநாசி அருகே குடியிருப்புப் பகுதியில் குப்பை கொட்ட வந்த லாரியை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், வேட்டுவபாளையம் ஊராட்சிக்குள்பட்ட அ.குரும்பபாளையம் ருக்மா காா்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டுவதால் துா்நாற்றம் வீசி சுகதார சீா்கேடு ஏற்படுகிறது.

அடிக்கடி குப்பைக்கு தீ வைப்பதால் எழும் புகையால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை மூச்சுத் திணறல் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, இப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என பொதுமக்கள் கூறி வந்தனா்.

இந்நிலையில், எதிா்ப்பை மீறி வாகனத்தில் செவ்வாய்க்கிழமை எடுத்துவரப்பட்ட குப்பையை அப்பகுதி அருகே கொட்டி தீ வைத்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இனிவரும் காலங்களில் இப்பகுதியில் குப்பை கொட்டப்படாது என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு வாகனத்தை பொதுமக்கள் விடுவித்தனா்.