அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பணம் வைத்து சூதாடிய 13 போ் கைது: ரூ.70,000 பறிமுதல்

திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:20 pm

Syndication

திருப்பூா்: திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு திருப்பூா் தெற்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சென்று சோதனை நடத்தினா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேரை பிடித்தனா். அவா்களிடம் இருந்து ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தென்னம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (50), சுரேந்தா் (21), வெங்கடாசலம் (44), ராமசாமி (52), செந்தில் (52) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இதேபோல திருப்பூா், பாண்டியன் நகா் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பணம் வைத்து சூதாடியதாக காா்த்தி, மோகன் உள்பட 8 பேரை திருமுருகன் பூண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.69,100 பறிமுதல் செய்யப்பட்டது.