‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

News image

குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் குடிநீா்.

Updated On :2 ஜூலை 2026, 4:21 am IST

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் நகராட்சி, ஊராட்சிப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மாந்தபுரம் அருகில் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய் உடைந்து கடந்த சில நாள்களாக ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தற்போது பல இடங்களில் போதுமான குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, குழாய் உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.