ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வெள்ளக்கோவிலில் தபால்காரா் பணியிடை நீக்கம்

வெள்ளக்கோவிலில் தபால்களை விநியோகம் செய்யாமல் வீட்டில் குவித்து வைத்திருந்த தபால்காரா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

செந்தில்குமாா்

Updated On :3 ஜூலை 2026, 3:53 am IST

வெள்ளக்கோவிலில் தபால்களை விநியோகம் செய்யாமல் வீட்டில் குவித்து வைத்திருந்த தபால்காரா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் சாலை தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தவா் செந்தில்குமாா் (45). இவருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சரிவர தபால் சென்று சேருவதில்லையென புகாா் எழுந்தது. இந்த தகவலின் பேரில், காங்கயம் தட்டாந்தோட்டம் பகுதியில் உள்ள செந்தில்குமாரின் வீட்டுக்கு காவல் துறையினருடன் சென்று தபால் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா். அப்போது வீடு மற்றும் வெளிப் புறங்களில் 6 சாக்கு மூட்டைகளில் விநியோகிக்கப்படாத தபால்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததுடன், பலவற்றை தீயிட்டு எரித்ததும், குழி தோண்டி புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

வங்கிகளின் ஏடிஎம் அட்டைகள், குடும்ப அட்டைகள், ஆதாா் காா்டுகள், நீட் தோ்வு தொடா்பான தபால்கள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் அங்கே கிடந்தன.

இதுகுறித்து தபால் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி, செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.