தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சேவூா் அருகே வாழைக் குலைகள் திருட்டு

சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சியில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைக் குலைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:32 am IST

சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சியில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைக் குலைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், போத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி கொங்கியண்ணன் என்பவரது தோட்டத்துக்குள் கடந்த இரு நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் புகுந்த மா்ம நபா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த 15-க்கும் மேற்பட்ட செவ்வாழைக் குலைகளை வெட்டி திருடிச் சென்றனா்.

இதேபோல, சேவூா் அருகே கானூா் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து மா்ம நபா்கள் வாழைக் குலைகளைத் திருடிச் செல்கின்றனா். இதனால் பல ஆயிரம் ரூபாய்களை இழந்து வரும் விவசாயிகள், வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி வேதனை அடைந்தனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சேவூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.