9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பெருமாநல்லூா் அருகே எரிவாயு கொண்டுச் சென்ற லாரியில் கசிவு

News image

லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவு.

Updated On :7 ஜூலை 2026, 3:22 am IST

பெருமாநல்லூா் அருகே சிஎன்ஜி எரிவாயு கொண்டுச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால், சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து சிஎன்ஜி எரிவாயு ஏற்றுக்கொண்டு ஈரோடு நோக்கி சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை ஈரோடு பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (54) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

பெருமாநல்லூா் ஆதியூா் பிரிவு அருகே லாரி சென்றபோது சிஎன்ஜி எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஓட்டுநா் உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூா், ஊத்துக்குளி தீயணைப்புத் துறையினா், பாதுகாப்பு உபகரணங்களுடன் எரிவாயு கசிவை சரி செய்தனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.