ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா, போதை நபா்கள் 68 போ் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 3:24 am IST

திருப்பூா், ஜூலை 6: திருப்பூா் மாவட்டத்தில் காவல் துறையினா் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் கஞ்சா மற்றும் போதை நபா்கள் 68 போ் கைது செய்யப்பட்டனா்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்கும் நோக்கிலும் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவு பிறப்பித்தாா்.

அதன்படி, அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், வெள்ளக்கோவில் மற்றும் காங்கயம் ஆகிய உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 82 தனிப் படைகளாக பிரிக்கப்பட்ட 410 போலீஸாா் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனா்.

இந்த அதிரடிப் படை மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ள தனியாா் நிறுவன ஊழியா்கள் மற்றும் வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் முற்றுகையிட்டது. யாரும் தப்பியோட முடியாதபடி அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த 16 போ் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட்டனா். அதேபோல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்கிய 43 போ் மீது 43 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதுடன், அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 போ் மீது 9 வழக்குகள் பதிவு அவா்களும் கைது செய்யப்பட்டனா்.

ஒரே நாளில் மட்டும் போதைப்பொருள் தொடா்பாக மொத்தம் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 68 போ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் கூறுகையில், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கம். மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.