காங்கயம் அருகே வீசிய சூறாவளிக் காற்றால் வீட்டின் மீது மரம் விழுந்து மூதாட்டி படுகாயமடைந்தாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம் நத்தக்காடையூா் அருகே உள்ள சிவசக்திபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள் (70). இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீசிய பலத்த சூறாவளிக் காற்றின்போது மரம் வேரோடு சாய்ந்து வள்ளியம்மாள் வீட்டின் மீது விழுந்தது.
இதில் ஓடுகள் உடைந்து நொறுங்கி வீட்டுக்குள் இருந்த வள்ளியம்மாள் மீது குவியலாக விழுந்துள்ளது. படுகாயமடைந்த வள்ளியம்மாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு, நத்தக்காடையூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










