முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

கொடுவாய் அருகே வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள், காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image

காங்கயம் வட்டாட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்த நிழலி பகுதி மக்கள்.

Updated On :5 ஜூன் 2026, 1:02 am IST

கொடுவாய் அருகே வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள், காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து எல்லப்பாளையம் ஊராட்சி, நிழலி கிராமத்தைச் சோ்ந்த சாயாத்தாள் (55) உள்ளிட்டோா் காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேலுவிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நாங்கள் நிழலி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு அருகே 10 வீடுகள் உள்ளன. இதன் அருகே அரசு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்நிலையில், எங்கள் பகுதியில் சிலா் அரசு ஓடைப்பள்ளதை ஆக்கிரமிக்கும் பொருட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகளை மேற்கொண்டனா். இதனால் அருகே உள்ள எங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கதிா்வேல், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

அப்போது ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பெளத்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.