கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :10 ஜூலை 2026, 12:09 am IST

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சாலையில் பெருமாநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை மேற்கொண்டனா். இதில், விற்பனைக்காக அவா் கஞ்சா வைத்திருந்ததும், பெருமாநல்லூா் அருகே வாரணாசிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் மேற்குவங்கத்தைச் சோ்ந்த மனோஜ் சவுத்ரி (26) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜ் சவுத்ரியை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 40 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.