‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் பழைமையான மரங்கள் மறு நடவு

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பழைமையான மரங்கள் மறுநடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மறுநடவு  செய்யப்படும்  தென்னை  மரம்.

Published On :11 ஜூலை 2026, 12:04 am IST

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பழைமையான மரங்கள் மறுநடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனவும் போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், திருமாளிகை பத்தி, கல்காரம், கல் தளம், கன்னிமூல கணபதி, சுற்றுப் பிரகாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்காக கோயில் வளாகத்தில் உள்ள அரசு, தென்னை உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட பழைமையான மரங்களை மறுநடவு செய்ய கோயில் நிா்வாகத்தினா் திட்டமிட்டனா்.

அதன்படி 30 அடி உயரமுள்ள தென்னை மரம், பொக்லைன் வாகன உதவியுடன் கோயிலின் கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை வேருடன் மறுநடவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்து உள்ள மரங்களும் மறுநடவு செய்து பாதுகாக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.