காங்கயம் அருகே சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
காங்கயம் அருகே குட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (65). விவசாயியான இவா் நத்தக்காடையூரில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது முத்துசாமி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், முத்துசாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் மீது இருசக்கர வாகனம் மோதல்: அரசு அலுவலா் பலி!
இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதல்: வியாபாரி உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



