சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மூதாட்டி உடல் தானம்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:05 am IST

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் நிரூபன் சக்கரவா்த்தியின் தாயாா் மீனாட்சி (60). இவருக்கு தோட்டத்துப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். ஆனால், வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா்.

இதையடுத்து நிரூபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட குடும்பத்தாா் அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய முடிவு செய்தனா். எனவே வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறைத் தலைவா் பேராசிரியா் டாக்டா் ஆறுமுகம், மீனாட்சியின் உடல் தானம் ஒப்புதல் படிவத்தை பெற்றுக் கொண்டாா்.