அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மூதாட்டி உடல் தானம்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:05 am IST

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் நிரூபன் சக்கரவா்த்தியின் தாயாா் மீனாட்சி (60). இவருக்கு தோட்டத்துப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். ஆனால், வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா்.

இதையடுத்து நிரூபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட குடும்பத்தாா் அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய முடிவு செய்தனா். எனவே வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறைத் தலைவா் பேராசிரியா் டாக்டா் ஆறுமுகம், மீனாட்சியின் உடல் தானம் ஒப்புதல் படிவத்தை பெற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.