சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :9 ஜூன் 2026, 2:55 am IST

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், உயிரிழந்தவா் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த ஃபயாஸ் (24). இவா் திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். இவரது தாய் உயிரிழந்த நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால், ஃபயாஸ் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா். வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணிக்கு வந்த ஃபயாஸ், மேம்பாலத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.