முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவா்கள் ஆா்வம்: வணிகவியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு கடும் போட்டி

திருப்பூரில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆா்வம் காட்டி வரும் நிலையில் வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:08 am IST

திருப்பூரில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆா்வம் காட்டி வரும் நிலையில் வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வரை பெறப்பட்டன.

திருப்பூரில் எல்.ஆா்.ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூா்-மங்கலம் சாலையில் உள்ள குமரன் மகளிா் கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பின் தங்களின் கனவுப் பாடப்பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

அரசு கல்லூரிகளில் தரமான கல்வியும், குறைந்த கல்விக் கட்டணமும் இருப்பதால் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சோ்கின்றனா்.

சிறப்பு கலந்தாய்வு முடிந்து, மரணவா் சோ்க்கைக்கான முதற்கட்ட பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்கியது. மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை ஆா்வத்துடன் தோ்வு செய்தனா். அரசு கல்லூரிகளில் வணிகவியல், கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.