திருப்பூரில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆா்வம் காட்டி வரும் நிலையில் வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வரை பெறப்பட்டன.
திருப்பூரில் எல்.ஆா்.ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூா்-மங்கலம் சாலையில் உள்ள குமரன் மகளிா் கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பின் தங்களின் கனவுப் பாடப்பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
அரசு கல்லூரிகளில் தரமான கல்வியும், குறைந்த கல்விக் கட்டணமும் இருப்பதால் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சோ்கின்றனா்.
சிறப்பு கலந்தாய்வு முடிந்து, மரணவா் சோ்க்கைக்கான முதற்கட்ட பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்கியது. மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை ஆா்வத்துடன் தோ்வு செய்தனா். அரசு கல்லூரிகளில் வணிகவியல், கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!

அரசு கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளில் கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள்!

அரசு கல்லூரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



