துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

திருப்பூா் மாநகரில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :14 ஜூன் 2026, 2:26 am IST

திருப்பூா் மாநகரில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், நிா்வாக நலன் கருதியும் காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த காா்த்திகேயன், சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, திருப்பூா் மாநகர சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த், திருப்பூா் வடக்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல, ஈரோடு மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி, திருப்பூா் மாநகர சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். திருப்பூா் கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த விஜயா, திருப்பூா் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக கோவை மாவட்டத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த கோமதி, திருப்பூா் கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.