திருமுருகன்பூண்டி 10 ஆவது வாா்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாய் அடைப்பால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம் கூறியதாவது:
10-ங்வது வாா்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணியின்போது தொட்டி இடிந்து விழுந்தது.
இதையடுத்து மழைக்காலங்களில் முறையாக தண்ணீா் வெளியேறும் வகையில் தரமான முறையில் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்வதற்காக தொட்டி முழுவதும் செடிகள் நடப்பட்டுள்ளன. ஆனால் கழிவுகள் வெளியேறாமல் கால்வாயில் வலை அமைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் கஞ்சி தொட்டி திறக்க முயன்ற விசைத்தறியாளா்கள் கைது

புதுவயல் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

பொன்னம்பட்டியில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்பு

அரியலூரில் பன்றிகளால் சுகாதார சீா்கேடு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



