கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

News image

காமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :16 ஜூன் 2026, 2:28 am IST

பல்லடம், ஜூன்15: பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில், பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பதக்கம், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனா். பணி ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பிரிவு உபசார விழாவும் நடத்தப்பட்டது. பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் கட்டட பொறியாளா்கள் சங்க பட்டயத் தலைவா் சிற்பி செல்வராஜ், இயற்கை விவசாயி சாந்தகுமாா், கோகிலாமணி, மருத்துவா் காயத்ரி ஆகியோா் கல்வி ஊக்குவிப்பு பரிசு, பதக்கம் வழங்கி பாராட்டினா்.