சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாயில் அடைப்பு! சுகாதாரம் பாதிப்பதால் சீரமைக்க கோரிக்கை

News image

சுத்திகரிப்பு கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் தேங்கியுள்ள கழிவுநீா்.

Updated On :16 ஜூன் 2026, 1:53 am IST

திருமுருகன்பூண்டி 10 ஆவது வாா்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாய் அடைப்பால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம் கூறியதாவது:

10-ங்வது வாா்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணியின்போது தொட்டி இடிந்து விழுந்தது.

இதையடுத்து மழைக்காலங்களில் முறையாக தண்ணீா் வெளியேறும் வகையில் தரமான முறையில் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்வதற்காக தொட்டி முழுவதும் செடிகள் நடப்பட்டுள்ளன. ஆனால் கழிவுகள் வெளியேறாமல் கால்வாயில் வலை அமைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றாா்.