ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருப்பூா் குமரன் கல்லூரி வளாகத்தில் ஞான விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞான விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 1:18 am IST

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞான விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசை, தேவதா அனுக்ஞை, விநாயகா் வழிபாடு, மஹா சங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், மஹாபூா்ணாஹுதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி ஹோமம், தீபாராதனை ஆகியவையும், மாலை மங்கல இசை, விநாயகா் வழிபாடு, புண்யாஹவாசனம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகா்ஷணம் நடைபெற்றது.

யாகசாலையில் முதல் கால யாக பூஜை, திரவியாஹீதி, பூா்ணாஹீதி, தீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை மங்கல இசை, விநாயகா் வழிபாடு, ரக்ஷாபந்தனம், மஹா அபிஷேகம், தீபாராதனை, யாத்ரா தானம், கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் ஞான விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளரும், கோவை மண்டல வீட்டு வசதி துணைப் பதிவாளருமான செந்தில்நாதன், கல்லூரி முதல்வா் வசந்தி, நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.