27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்ற அலுவலா்கள், கல்லூரி மாணவிகள்.

Updated On :19 ஜூன் 2026, 3:58 am IST

திருப்பூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை ஆட்சியா் மனீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தென்னம்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியே சென்ற பேரணி எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் பங்கேற்று, போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.,