ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.

Updated On :26 ஜூன் 2026, 2:42 am IST

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இப்பேரணியை, வெள்ளக்கோவில் காவல் நிலைய தலைமைக் காவலா் கௌதமன் தொடங்கிவைத்தாா்.

பள்ளி தலைமை ஆசிரியை மோகனாம்பாள் முன்னிலை வகித்தாா். போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பள்ளியில் இருந்து தொடங்கி பேரணி, நடேசன் நகா் வழியாக காவல் நிலையம் வரை சென்று திரும்பியது. இப்பேரணியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை கவிதா நந்தகுமாா் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.