தோ்தல் வாக்குறுதிப்படி முதல்வா் சி.ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால், வரும் உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுக்கு எதிராகச் செயல்படுவோம் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு செயலாளா் ஈஸ்வரன் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் ஆதரவோடு சி.ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றாா். ஆனால், விவசாயிகளுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி முழுமையான பயிா்க் கடனைத் தள்ளுபடி செய்யாமல், தற்போதைய அரசும் ஏமாற்றி வருகிறது.
பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், முதல்வா் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறாா்.
நிதி நிலவரங்களை அறிந்து வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது நிதிப் பற்றாக்குறை என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே, முதல்வா் சி.ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில், வருகிற உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுக்கு எதிராக விவசாயிகள் ஒட்டுமொத்தமாகச் செயல்படுவாா்கள் என கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: மீண்டும் விவசாயிகள் ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

வேளாண் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு... தவெக அரசு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!






