ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

News image
முகாமில் பேசுகிறாா் தலைமை ஆசிரியை ரேவதி.
Updated On :5 மார்ச் 2026, 11:32 pm

Syndication

வெள்ளக்கோவில் துரைராமசாமி நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புகையிலை தடுப்புத் துறை திருப்பூா் மாவட்ட அலுவலா் டாக்டா் சௌமியா தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மற்றொரு அலுவலா் பிரவீன், வெள்ளக்கோவில் வட்டார சுகாதார அலுவலா் கருப்புசாமி, சுகாதார ஆய்வாளா் கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

அப்போது, போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் என்னென்ன, அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், தவிா்க்கும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினா். பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.