எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மத்திய அரசின் நலத் திட்டங்கள்: அவிநாசியில் 3 நாள் சேவை முகாம்

மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான 3 நாள் சேவை முகாம், அவிநாசியில் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
அவிநாசியில்  நடைபெறும்  மத்திய  அரசின்  நலத்திட்டங்களுக்கான  சேவை  முகாமில் பங்கேற்றோா்.
Updated On :9 மார்ச் 2026, 7:34 pm

Syndication

அவிநாசி: மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான 3 நாள் சேவை முகாம், அவிநாசியில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த முகாம் மத்திய மக்கள்தொடா்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் அவிநாசி வடக்கு ரத வீதி குலாலா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த முகாமை மத்திய மக்கள் தொடா்பக இயக்குநா் காமராஜ் தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திருப்பூா் குமரன் கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதாா் திருத்தங்கள், வங்கி சேவைகளுக்கான பதிவு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு, ஆன்லைன் எல்.எல்.ஆா். பதிவு, மூத்த குடி மக்களுக்கான நலத்திட்ட பதிவுகள், பிஎம் உஜ்வலா உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு ஆதாா் அட்டை, வங்கி சேவை, ஆயுஸ்மான் அட்டை உள்ளிட்டவைகள் புதிதாக வழங்கப்பட்டன.