அவிநாசி: மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான 3 நாள் சேவை முகாம், அவிநாசியில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த முகாம் மத்திய மக்கள்தொடா்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் அவிநாசி வடக்கு ரத வீதி குலாலா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த முகாமை மத்திய மக்கள் தொடா்பக இயக்குநா் காமராஜ் தொடங்கிவைத்தாா்.
இதைத்தொடா்ந்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திருப்பூா் குமரன் கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதாா் திருத்தங்கள், வங்கி சேவைகளுக்கான பதிவு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு, ஆன்லைன் எல்.எல்.ஆா். பதிவு, மூத்த குடி மக்களுக்கான நலத்திட்ட பதிவுகள், பிஎம் உஜ்வலா உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கு ஆதாா் அட்டை, வங்கி சேவை, ஆயுஸ்மான் அட்டை உள்ளிட்டவைகள் புதிதாக வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன்: கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

உதகையில் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் தொடக்கம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

