நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 2:07 am IST

திருப்பூா்: மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா், பழனிச்சாமி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (35). போயம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த இவரது மோட்டாா் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதனடிப்படையில் பெருமாநல்லூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் சரவணனுக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை திருடியதை ரமேஷ்குமாா் ஒப்புக் கொண்டாா். மேலும், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் 3 மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரமேஷ்குமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.