தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
- சதீஷ்குமாா்
Updated On :11 மார்ச் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், புள்ளச்செல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சதீஷ்குமாா் (40). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளக்கோவில் - மூலனூா் சாலை சின்னக்கரை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சரக்கு வேன் ஓட்டுநரான பவானி, வேலம்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த சதீஷ்குமாருக்கு தாய் செல்வி, தங்கை தேவி ஆகியோா் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.