குண்டடம் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 7 போ் படுகாயமடைந்தனா்.
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்த செல்லபாண்டி (55), மனைவி பால்பாண்டி அம்மாள் (48), மகன் பிரசாந்த் (29), பிரசாந்தின் மனைவி வீராதேவி (29), இவா்களது மகன்கள் பாரதிகண்ணன் (8), பிரணவ் (3), பிரசாந்தின் மாமனாா் சிவமுருகன் (50), அவரது மனைவி அழகேஸ்வரி (44) ஆகிய 7 பேரும் கோவையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிக்கு குண்டடம் வழியாக காரில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.
குண்டடம் பகுதியை அடுத்த சங்கபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரும் படுகாயமடைந்தனா். இவா்களை அருகே இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து குண்டடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு

காா் கவிழ்ந்து 7 போ் காயம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


