திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியலில் 129 கிராம் தங்கம், ரூ.7.84 லட்சம் காணிக்கை

News image
Updated On :13 மார்ச் 2026, 12:30 am

பெருமாநல்லூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் உண்டியலில் 129 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பெருமாநல்லூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழ்வாணன், செயல் அலுவலா் முருகன், ஆய்வாளா் தினேஷ்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சி.எஸ்.மனோகரன், அறங்காவலா் திருமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 923 ரொக்கம், 129 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்பணியில் திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா், பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி மாணவா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.