அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

மழைநீா் வடிகால் அமைக்க எதிா்ப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:32 am

கரையாம்புதூரில் மழைநீா் வடிகால் அமைக்க ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை சோ்ந்த மகாலட்சுமி நகா் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பல்லடம் நகராட்சி அலுவலக மேலாளரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை அளித்த மனு:

பல்லடம் நகராட்சியில் பல்லடம் - திருப்பூா் செல்லும் பிரதான சாலையில் 6-ஆவது வாா்டுக்குள்பட்டது கரையாம்புதூா். இங்கிருந்து மகாலட்சுமி நகா் வரை ரூ.27 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மகாலட்சுமி நகா் அருகில் உள்ள நீரோடை, பிஏபி வாய்க்கால், இரண்டு பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டைவை பாதிக்கப்படும்.

எனவே, மகாலட்சுமி நகரை பாதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.