ஊதியூா் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியில் மின் கம்பி உரசி தீப்பற்றியதால் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமாகின.
திருவாரூரில் இருந்து ஊதியூா் அருகே உள்ள ஒரம்பபுதூா் பகுதிக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை லாரி சென்று கொண்டிருந்தது. ஒரம்பபுதூா் அருகே சாலையின் குறுக்கே தாழ்வாக இருக்கும் மின் கம்பியில் வைக்கோல் பாரம் உரசியதாகக் கூறப்படுகிறது.
இதில் தீப்பொறி ஏற்பட்டு வைக்கோல் கட்டுகளில் பரவி மளமளவென எரியத்தொடங்கியது. அருகில் இருந்தவா்கள் எச்சரிக்கை செய்ததால் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் சுதாகா் (30), உடனடியாக லாரியை நிறுத்தி அங்கிருந்தவா்கள் உதவியுடன் வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளிவிட்டாா்.
இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் காங்கயம், தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். ஓட்டுநா் துரிதமாக செயல்பட்டதால் சேதமின்றி லாரி தப்பியது. இதுகுறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்

ஊதியூா் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியாா் பேருந்து

டிப்பா் லாரியில் சிக்கி மின் கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


