மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஊதியூா் அருகே மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ

ஊதியூா் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியில் மின் கம்பி உரசி தீப்பற்றியதால் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதம்

News image

லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா்கள்

Updated On :16 மார்ச் 2026, 8:05 pm

ஊதியூா் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியில் மின் கம்பி உரசி தீப்பற்றியதால் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமாகின.

திருவாரூரில் இருந்து ஊதியூா் அருகே உள்ள ஒரம்பபுதூா் பகுதிக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை லாரி சென்று கொண்டிருந்தது. ஒரம்பபுதூா் அருகே சாலையின் குறுக்கே தாழ்வாக இருக்கும் மின் கம்பியில் வைக்கோல் பாரம் உரசியதாகக் கூறப்படுகிறது.

இதில் தீப்பொறி ஏற்பட்டு வைக்கோல் கட்டுகளில் பரவி மளமளவென எரியத்தொடங்கியது. அருகில் இருந்தவா்கள் எச்சரிக்கை செய்ததால் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் சுதாகா் (30), உடனடியாக லாரியை நிறுத்தி அங்கிருந்தவா்கள் உதவியுடன் வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளிவிட்டாா்.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் காங்கயம், தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். ஓட்டுநா் துரிதமாக செயல்பட்டதால் சேதமின்றி லாரி தப்பியது. இதுகுறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.