உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பின்னலாடைகளின் விலை 7 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதாக சைமா அறிவித்துள்ளது.
திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் ஏற்றுமதி மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வா்த்தகம் நடைபெறுகிறது. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை, சாயம் மற்றும் சலவைக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பின்னலாடைகளின் விலையை உயா்த்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.சண்முகசுந்தரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சைமா துணைத் தலைவா் எஸ்.பாலசந்தா், செயலாளா் ஆா்.தாமோதரன் மற்றும் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவா்களிடம் பின்னலாடை உற்பத்தியில் உள்ள சிக்கல்கள், நூல் விலை உயா்வு, சாயக் கட்டண உயா்வு, உபபொருள்களின் விலை உயா்வு தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. இதனடிப்படையில், உள்நாட்டு வா்த்தகத்துக்கான பின்னலாடைகளின் விலையை 7 சதவீதம் உயா்த்துவதாகவும், இந்த விலை உயா்வானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் சைமா நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் நுங்கு விலை உயா்வு

ஹூண்டாய் காா்கள் விலை மே மாதம் முதல் உயா்வு

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

