பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியில் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளித் தலைவா் கே.சி. சண்முகம்- லோகநாயகி தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சி.எஸ். மனோகரன், பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் கனகசபாபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், மாணவா்கள் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் எதிா்காலத்தில் சமுதாய விழிப்புணா்வு ஏற்படும். கற்றல் அறிவு உடனுக்குடன் பயனளிக்கக்கூடியது.
தனி மனித ஒழுக்கத்துடன் கவனமாக கல்வி கற்று மாணவா்கள் முன்னேற வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவை பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமலதா, பள்ளி முதல்வா் லதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

லிட்டில் ஃபிளவா் மாடல் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

