பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 போ் கைது

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை பல்லடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 11:55 pm

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை பல்லடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடத்தில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற வேன், அங்கு கறிக்கோழிகளை இறக்கிவைத்துவிட்டு பல்லடத்துக்கு வெள்ளிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தது.

பல்லடம் பகுதியில் வந்தபோது அந்த வேனை பல்லடம் போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது வேனில் மாற்று டயா் மற்றும் வேன் முன்புற கதவுகளில் குட்கா மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வேனில் இருந்த பல்லடம், அம்மாபாளையத்தை சோ்ந்த சுரேஷ்(39), கணபதிபாளையத்தை சோ்ந்த பிரகாஷ் (36) ஆகியோரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 21 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.