எனவே, இந்தப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடையற்ற சிலிண்டா் விநியோகம் மற்றும் நியாயமான விலை ஆகியவற்றை உறுதி செய்து தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வணிக சிலிண்டா்களின் பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டா் தட்டுப்பாட்டால் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சுமாா் 3,000 பேக்கரிகளில் 15,000 தொழிலாளா்கள் நேரடியாகவும், சுமாா் 1 லட்சம் போ் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே நிலை தொடா்ந்தால் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.