திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளா்கள் போா்வையில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களும் சட்டவிரோதமாக குடியேறி பணியாற்றி வருவதால், போலீஸாா் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் முறையான ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கடந்த 2025 ஜூன் மாதம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு வங்கதேசத்தைச் சோ்ந்த 25 போ் நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததும், வங்கதேச அடையாள அட்டைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 25 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,
சட்டவிரோதமாக குடியேறிய 25 பேரும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

குஜராத்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 166 வங்கதேசத்தவா் கைது
புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கொலை முயற்சி வழக்கு: 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



